இடம் மாறும் மதுரை மத்திய சிறை ...! காரணம் என்ன?
Madurai Central Jail relocated What reason
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் மத்திய சிறைச்சாலை உள்ளது. தற்போது மதுரை நகரம் விரிவடைந்து வருவதால், சிறைச்சாலை அந்த பகுதியில் செயல்படுவதில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

அதுமட்டுமின்றி, சிறைச்சாலையில் கைதிகளுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரூ.336 கோடி மதிப்பில், மேலூர் அருகே புதிய மத்திய சிறைச்சாலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மதுரை மத்திய சிறைச்சாலை ஆரப்பாளையத்திலிருந்து மேலூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Madurai Central Jail relocated What reason