சிவகங்கை! கோதுமையை மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் கோதுமை மூட்டைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்து உள்ளது.

காரைக்குடி கிடங்கிலிருந்து 240 கோதுமையும் மூட்டைகளுடன் தனியார் லாரி ஒன்று சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு உணவு நிறுவனம் கிடங்கிற்கு 4:30 மணி அளவில் வந்துள்ளது.

ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு ஓரிடத்தில் சென்று தூங்கியுள்ளார். அப்பொழுது திடீரென்று லாரி தீப்பிடித்து சுமார் ஆறு மணி அளவில் எரிந்துள்ளது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட கோதுமை முட்டைகள் எரிந்து வீணாகி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிவகங்கை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lorry fire accident in sivagangai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->