திருச்சி: ரூ.2000 லஞ்சம் வாங்கிவருக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின் 3 ஆண்டுகள் சிறை!
Bribe trichy case tamilnadu
திருச்சி மாவட்டம், சின்னப்பனையூர் மின்வாரியத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ₹2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், உதவிப் பொறியாளர் நாராயணன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
லஞ்ச வழக்கு:
2011ஆம் ஆண்டு, மின் கம்பம் நடுவதற்காக நாராயணன் ₹2,000 லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணை: சுமார் 14 ஆண்டுகள் கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நாராயணன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
தண்டனை: குற்றவாளியான நாராயணனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூடுதலாக ₹10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளில் விசாரணை காலதாமதமானாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
English Summary
Bribe trichy case tamilnadu