செங்கல்பட்டு || லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 10 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


மேல்மருவத்தூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலுர் பகுதி அருகே பேருந்து சென்ற போது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரில் இருந்து சிமெண்ட் மூட்டை ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மேல்மருவத்தூர் போலீசார், விபத்துக்குள்ளான லாரி மற்றும் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry bus accident in melmaruvathur near


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->