பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை! எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு! - தற்காலிகமாக தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்படும் - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளால் பல ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, சில ரெயில்கள் தாம்பரம் நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, திருநெல்வேலி-எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை தாம்பரம் நிலையத்திலிருந்து புறப்பட்டு இயக்கப்படும்.

ஆனால், எழும்பூர் நிலையத்திற்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இதே விதமாக தாம்பரம் நிலையம் தற்காலிக ஆரம்ப நிலையாக செயல்படும்.

மேலும், தாம்பரம்-ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும்.

இதனை முன்னிட்டு பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை புதுப்பித்து ஏற்பாடு செய்யுமாறு தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caution passengers Egmore railway station under renovation Temporarily departs from Tambaram station


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->