விழுப்புரம்: அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா - பிப். 21 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
Local Holiday Declared in Villupuram for Melmalayanur Angalamman Temple Chariot Festival
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உலகப்பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பின் சிறப்பம்சங்கள்:
* தேதி: வரும் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* பரிதி: இந்த விடுமுறையானது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குப் பொருந்தும்.
* தேர்வுகள் வழக்கம் போல் நடக்கும்: ஒருவேளை பள்ளி அல்லது கல்லூரிகளில் 21-ஆம் தேதி அன்று இறுதித் தேர்வுகள் (Final Exams) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தால், அந்தத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றித் திட்டமிட்டபடி நடைபெறும்.
* கருவூலச் செயல்பாடு: அவசர அலுவலகப் பணிகளைக் கவனிக்க ஏதுவாக மாவட்டக் கருவூலம் மற்றும் அனைத்துச் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் இயங்கும்.
இந்த விடுமுறை உத்தரவை மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப. அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பிறப்பித்துள்ளார்.
English Summary
Local Holiday Declared in Villupuram for Melmalayanur Angalamman Temple Chariot Festival