தகராறை தடுக்கப் போய் நேர்ந்த கொடூரம்...! காஞ்சிபுரத்தில் தந்தை கையில் மடிந்த 22 வயது மகன்...! மனதை உலுக்கும் பின்னணி என்ன...?
brutality that happened while trying stop dispute 22 year old son died his father arms Kanchipuram What heartbreaking background
காஞ்சீபுரத்தில் குடும்பத்திற்குள் நீண்டநாளாக நீடித்து வந்த கருத்து மோதல், கணநேரத்தில் ரத்தக்கலவரமாக மாறி இளம் மகனின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை-மகன் இடையிலான வாக்குவாதம் கட்டுக்கடங்கி வன்முறையாக மாறியதில், குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அறப்பெரும் செல்வி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (50). பூக்களை மாலையாக கட்டி விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவரது மகன் ரூபேஷ் (22), டாட்டூ கலைஞராக பணியாற்றி வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட ரூபேஷுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஏழுமலைக்கும் ரூபேஷுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வீட்டில் தொடர்ச்சியாக பதற்றமான சூழல் நிலவி வந்துள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வார்த்தை மோதல் தீவிரமடைந்து ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த ரூபேஷ், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து தந்தை ஏழுமலையை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை தடுக்க முயன்ற ஏழுமலை, மகனின் கையிலிருந்த கத்திரிக்கோலை பறித்துக்கொண்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் ஏற்பட்ட பரபரப்பில், அதே கத்திரிக்கோலால் ரூபேஷை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ரூபேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை காப்பாற்ற முயன்றபோதிலும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.
ரூபேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தந்தை ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார்.குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் உயிர்பலியாக மாறிய இந்த சம்பவம் காஞ்சீபுரம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brutality that happened while trying stop dispute 22 year old son died his father arms Kanchipuram What heartbreaking background