கோவையை உலுக்கிய சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.!
Loan problem 4 family members suicide in covai
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பொறியாளர் ராஜேஷ், இவரது மனைவி லக்ஷயா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளனர். இதில், ராஜேஷின் தாய் உட்பட மொத்தம் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜேஷ் தூக்கிடும், மற்ற மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
Loan problem 4 family members suicide in covai