பொதுமக்களே உஷார்.. மெடிக்கலில் ஊசி போட்ட கூலித் தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கல் ஊசி போட்டுக் கொண்ட கூலித் தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூலி தொழிலாளி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதில் மருத்துவமனைக்கு செல்ல நேரம் இல்லாததால் அவர் அருகில் உள்ள தனியார் மெடிக்கலில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஊசி போட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் மெடிக்கலில் ஊசி போட்டுக் கொண்ட அடுத்த சிறிது நேரத்தில் அந்த நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் ஊசி போட்ட தனியார் மெடிக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

labour injection medical facility suffered a seizure and died


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->