மருத்துவர் கண்காணிப்பில் இல.கணேசன்: மூன்றாவது நாளாக தொடரும் தீவிர சிகிச்சை..!
La Ganesan in intensive care at Apollo Hospital for the 3rd day
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், கடந்த 8-ந்தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து 03-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட்டுள்ளது. தொடர்ந்து இல.கணேசனின் உடல்நிலை குறித்துடாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
English Summary
La Ganesan in intensive care at Apollo Hospital for the 3rd day