குன்றத்தூர் அபிராமி போல கோவையில் ஒரு தமிழரசி! கள்ளக்காதலுக்காக குழந்தையைக் கொன்ற கொடூர தாய்! - Seithipunal
Seithipunal


கோவை: இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி, கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். கட்டட பணியில் சித்தாளாக பணியாற்றும் இவர், அதே துறையில் பணியாற்றும் வசந்த் என்ற உடன்பணியாளருடன் கடந்த சில மாதங்களாக நெருக்கமாக பழகிவந்ததாக தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் தனது மகனுக்கு ஆடைகள் மாற்றி வீடியோக்கள் பதிவேற்றம் செய்வது வழக்கமாக இருந்த தமிழரசி, நேற்று மதியம் தனது நாலரை வயது மகனை வீடு அருகே மர்மமான முறையில் இழந்தார். தகவல் கிடைத்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை கைது செய்து கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தை தொடர்ந்து அழுததால் கோபத்தில் அடித்ததாகவும், அதனால் தான் குழந்தை உயிரிழந்ததாகவும் தமிழரசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த காலத்தில் சென்னை குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் தனது பிள்ளைகளை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kovai tamilarasi case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->