கோவை: பிரேக்-அப் செய்த காதலியை கல்லால் அடித்து கொன்ற நாடக காதலன் வழக்கில் அதிரடி தீர்ப்பு!
kovai Love Murder case judgement
கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்த 35 வயதான பிரசாந்த், 21 வயதுடைய பெண்ணுடன் காதல்தொடர்பில் இருந்தார். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக அந்த பெண் பின்னர் பிரசாந்துடன் தொடர்பை துண்டித்தார்.
இந்த நிலைமைக்கு கோபமடைந்த பிரசாந்த், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து, கல்லாறி பகுதியில் உள்ள பழப்பண்ணைக்கு கூட்டிச் சென்றார். அங்கு கல்லால் அடித்து கொலை செய்தார்.
இதுபற்றி வந்த புகாரின் பேரில் சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து பிரசாந்தை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று நீதிபதி இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், பிரசாந்துக்கு கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனை, கடத்தலுக்கு மேலும் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தடயங்களை மறைத்ததற்காக ஒரு வருட சிறை தண்டனை வழங்கினார்.
இந்த தண்டனைகளை அனைத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், பிரசாந்த் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
kovai Love Murder case judgement