கோவை பேனர் சரிந்து 3 பலியான விவகாரம் | ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal



கோயம்பத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே ராட்சச விளம்பர பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று தொழிலாளிகள், விளம்பர பேனர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், விளம்பரப் பலகை அமைக்கும் ஒப்பந்ததாரர் பழனிச்சாமி, நிலத்தின் உரிமையாளர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆளும் திமுக அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, தங்களின் கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் பேனர் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில், தனி குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

மேலும், அனுமதி அற்ற விளம்பரப் பலகைகளை அகற்றவும், காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kovai Karumathampatti Accident case District Collector order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->