விவேக் மறைவுக்கு முக்கிய சாதிக்கட்சி தலைவர் இரங்கல்.!
kongu eesvaran statement about vivek death
விவேக்கின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், "நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. சிந்திக்க வைக்கும் கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
நடிப்போடு மட்டும் நிற்காமல் தமிழ் சமூகத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டவர். ஐயா அப்துல்கலாம் அவர்களுக்கே விவேக்கை பிடிக்கும் என்று சொன்னால் அவரை இந்தியாவிற்கே பிடிக்கும். சமூக செயல்பாட்டாளராக ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்.
அப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்ட நடிகர் விவேக் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது நண்பர்களுக்கும், சினிமா துறையினருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
English Summary
kongu eesvaran statement about vivek death