தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள் - கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து! - Seithipunal
Seithipunal


தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற கிளையில் மது அளித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முன்பு கஸ்தூரி பேசிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.

பின்னர், அரசுத்தரப்பு வழங்கறிஞர் கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். முன் ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

மேலும், நடிகை கஸ்தூரி மீது  6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்க, கஸ்தூரி தரப்பில், குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு மட்டும் அந்த கூட்டம் நடக்கவில்லை. மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும்” என்று கேள்வி எழுப்பி, வழக்கை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kasturi case HC


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->