காசிமேடு மீனவர்கள் சார்பில் வரும் 10-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்..!
Kasimedu fishermen to hold one day symbolic strike and protest on the 10th
எதிர்வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காசிமேடு மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு மீனவர் சங்க சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் விஜேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து விஜேஷ் மேலும் கூறியுள்ளதாவது; சென்னை, திருவள்ளூர் மாவட்ட விசைப்படகுகளை ஆந்திர அரசு சிறை பிடித்து விடுவிக்கவில்லை. இதன் காரணமாக, தமிழக அரசு மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால், ஆந்திர மாநில கடல் உணவுகள், பிற மீன் வகைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதுச்சேரி, காரைக்கால் யூனியன் பிரதேச விசைப்படகுகள் அதிககுதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருத்தி, தொடர்ந்து ஆந்திர, தமிழக கடலோர பகுதிகளில் அத்துமீறி மீன் பிடிப்பதால் ஆந்திரா, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய், புதுச்சேரி மாநில அரசுடன் பேசி அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், அன்றைய தினம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
English Summary
Kasimedu fishermen to hold one day symbolic strike and protest on the 10th