வீட்டில் அக்காவுடன் இருந்த தங்கை மாயம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.. வாலிபருக்கு காவல்துறை வலை?..!
Kanyakumari Child Girl Missing Police Investigation 1 Feb 2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியை சார்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சம்பவத்தன்று, மாலை நேரத்தில் மாணவி மற்றும் அவரது அக்கா வீட்டில் இருந்துள்ளனர்.
மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், வீட்டிற்கு இரவு நேரத்தில் திரும்பியுள்ளனர். இதன்போது, இளைய மகள் வீட்டில் இல்லாததை அறிந்து, அக்காவிடம் தங்கை குறித்து கேட்டுள்ளனர்.
வெளியே சென்ற தங்கை இன்னும் வரவில்லை என்று அக்கா தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், மாணவியை கடத்தி சென்றது யார்? காதல் திருமண ஆசை வார்த்தையில் வாலிபருடன் சிறுமி மாயமாகியுள்ளாரா? என்பது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari Child Girl Missing Police Investigation 1 Feb 2021