மருத்துவமனையின் அலட்சியத்தால் 9 மாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு.?! உறவினர்கள் சாலை மறியல்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் மனைவி சுதா 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து மாதாந்திர பரிசோதனை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுதா அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் செல்லும் வழியிலேயே சுதா உயிரிழந்துள்ளார். மருத்துவமனையின் அலட்சியத்தால் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சர்ச்சையாகி 36 மணி நேரம் ஆன பின்னும் கூட இதுவரை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் மருத்துவமனை நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அலட்சிய போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக சுதாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kallakkurichi 9 month pregnant lady died In ambulance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->