“ஜெயலலிதா ஆவி என்னிடம் பேசியது!ஜெயலலிதாவை திட்டிய எம்ஜிஆர் ஆத்மா! எம்ஜிஆர் விஜய்யிடம் சொல்லச் சொன்னார்!” – ரீனா பிரதிலாவின் பகீர்!
Jayalalithaa spirit spoke to me MGR spirit scolded Jayalalithaa MGR told Vijay to tell him Reena Prathila Pakir
சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, அமைந்தகரையைச் சேர்ந்த ரீனா பிரதிலா என்ற பெண், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னிடம் பேசிவருகிறது என்று கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா ஆவி, நடிகர் விஜய்யிடம் சில முக்கிய விஷயங்களைச் சொல்லுமாறு தன்னை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரீனா,“சிறு வயதிலிருந்தே எனக்கு ஆன்மாக்கள் கண்ணுக்கு தெரிவார்கள். அதுபோலவே ஜெயலலிதா அம்மாவின் ஆவியும் என்னிடம் தோன்றி, பல விஷயங்களை பகிர்ந்தார். அவரின் இறப்பு குறித்த தகவல்களையும் சொல்லியிருக்கிறார். ‘நீ என் அண்ணன் மகள் தீபாவைச் சந்தி’ என கூட கூறியிருந்தார். நான் சொல்வது பொய் அல்ல” என்று கூறினார்.
ரீனா மேலும் கூறியதாவது:“ஜெயலலிதா அம்மாவின் ஆவி முதலில், ‘நான் யாருக்காவது சாபமிட்டால், அவர்களின் வம்சமே அழியும்; சிலர் அதை பயன்படுத்த என்னிடம் வந்தார்கள்’ எனச் சொன்னார்.எனக்கும், கீதாவுக்கும் (ஜெயலலிதாவின் தோழி) ஒரு சக்தி உண்டு என்றும், இன்னும் 9-10 பேருக்கு சக்தி கொடுக்கப் போகிறேன் என்றும் அவர் கூறினார்.
கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் சதி நடப்பதாக, சம்பவம் நடைபெறுவதற்கு முன் நாள் எனக்கு அந்த ஆவி எச்சரித்தார். அதை விஜய்யிடம் சொல்லி அலர்ட் செய்யச் சொன்னார்.”
மேலும் அவர் கூறுகையில்,“ஜெயலலிதா ஆவி, எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு ஆதரவு இல்லை, ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு உண்டு என்று கூறினார். விஜய் அடுத்த முதல்வராக வருவார் என்றும் சொன்னார்.கட்சியின் சூட்சுமங்களை விஜய்யிடம் பகிரச் சொன்னார். அதைச் சொல்லிவிட்டுப் பிறகே நான் மீடியாவிடம் பேசுவேன்” என்றார்.
ஜெயலலிதா ஆவி தன்னிடம் கொடுத்த முகவரிக்கு சென்றபோது, யாரும் இல்லாமல் அவமானப்பட்டதாகவும், பின்னர் கீதாவின் மேனேஜர் வழியாக அவருடன் பேச முடிந்ததாகவும் ரீனா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம், அதிமுக உள்கட்டமைப்பு, விஜய்யின் மீது ஏற்பட்ட கோபம், ‘தலைவா’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட விஷயங்களைப் பற்றியும் ஆவி தன்னிடம் பகிர்ந்ததாக ரீனா கூறியுள்ளார்.இந்த அதிர்ச்சி வெளிப்பாடு, அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Jayalalithaa spirit spoke to me MGR spirit scolded Jayalalithaa MGR told Vijay to tell him Reena Prathila Pakir