விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள்: சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. இதனை முன்னிறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விவசாயிகளின் குறுகிய கால வேளாண் தேவைகளை பூர்த்தி செய்ய உழவர் கடன் அட்டை திட்டத்தின் (Kisan Credit Card - KCC) கீழ் வட்டியில்லா பயிர் கடன்கள், நகை அடமானக் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் 1998 ஆம் ஆண்டு அறிமுகமாகியதிலிருந்து விவசாய பணிகளுக்காக குறுகிய கால கடன்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது இது வேளாண்மை சார்ந்த கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு பணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக KCC திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பிணையமின்றி ரூ.2 லட்சம் வரை பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்சங்கங்கள் அல்லது தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளும் இந்தக் கடனைப் பெறலாம்.

இக்கடன்கள் வழங்குவதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • நடப்புக் கால நிதியாண்டில் KCC விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள், இதர வணிக வங்கிகளில் ஏற்கனவே கடன் பெற்றிருக்கக் கூடாது என்பதைக் உறுதி செய்ய வேண்டும்.

  • Working Capital (நடைமுறை மூலதனக் கடன்) தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இக்கடன் வழங்கப்படும்.

  • கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

  • பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் சேர்த்து மொத்தம் ரூ.3 லட்சம் வரை வழங்கலாம்.

  • பயிர்க்கடன் இல்லாமல், வெறும் கால்நடை வளர்ப்பு/மீன்வளர்ப்பு கடனாகவே பெறும் நிலையில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்கலாம்.

  • உரிய காலத்திற்குள் கடன் திருப்பிச் செலுத்தும் பயனாளிகளுக்கு 7% வட்டி ஊக்கத்தொகை அரசு மூலம் வழங்கப்படும்.

  • நபார்டு வழிகாட்டுதல்களின்படி அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • கடன் விண்ணப்பிக்கும்போது உரிய KYC ஆவணங்கள், சொத்துப் பட்டியல் மற்றும் கால்நடை/மீன்வளர்ப்பு ஆதார சான்றுகள் அவசியம்.

  • கால்நடைகளுடன் பயனாளியின் புகைப்படம், சங்க செயலாளர் மற்றும் மேற்பார்வையாளருடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • படுக்கை உரிமம், RC புத்தகம், உறுப்பினர் அட்டை போன்ற ஆவணங்கள் மீன்வளர்ப்பு கடன்களுக்குத் தேவைப்படும்.

  • கடன் தொகை மாத தவணைகளாக 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இந்தக் கடன்கள் பொதுவாக பெறப்படும் KCC DMR கணக்குகள் வாயிலாகவே பட்டுவாடாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நெறிமுறைகள், திட்டத்தை மேலும் சீராக செயல்படுத்தும் வகையில் அமையும்.

விவசாயிகளின் நலனுக்காக திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழியாக, வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களில் ஈடுபட விரும்பும் சிறு விவசாயிகளுக்கு அதிக ஆதரவளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Interest free crop and livestock loans for farmers Tamil Nadu government makes a great announcement


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->