50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலை - அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளது அந்த கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மிக பழமையான கலச சம்ஹார மூர்த்தி என்ற வெண்கல சிலை திருட்டு போய் விட்டது.

கோவிலில் இந்த சிலைக்கு பதிலாக போலியான சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மிக பழமையான கலச சம்ஹார மூர்த்தி சிலை திருடப்பட்டது குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் திருட்டு போன கலச சம்ஹாரமூர்த்தியின் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கலச சம்ஹார மூர்த்தி சிலையின் படம் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதில், அந்த சிலை ஏலம் விடப்பட்டதாகவும் அதன் விலை 43 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்ததாவது, "இந்த சிலைக்குறித்த ஆவணங்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த சிலையை தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டுவருவதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றும் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian statue discovery in america


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->