ஐ.நா.வின் கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு! - Seithipunal
Seithipunal


ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக  கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்தியாவுக்கு ஐ.நா. பொது சபையின் 79-வது கூட்டத்தொடருக்கான தலைவர் பிலிமோன் யாங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் பதவி காலம் 3 ஆண்டுகள் நீடித்து இருக்கும் .இதில் தற்போது 18 நாடுகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.இந்தநிலையில் இதற்கான உறுப்பினர் நாடுகளின் வரிசையில், மற்ற நாடுகளுடன் இந்தியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. 

இந்தநிலையில் ஐ.நா.வின் கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய ஐ.நா. பொது சபையின் 79-வது கூட்டத்தொடருக்கான தலைவர் பிலிமோன் யாங் கூறியதாவது:ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக  கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்தியாவுக்கு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் இதற்கான பதவி காலம் தொடங்கும் என  தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஜெர்மனி, சீனா, ரஷியா, உக்ரைன், ஈகுவேடார், குரோஷியா, பெரு, நார்வே உள்ளிட்ட நாடுகளும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் இந்தியாவும் உறுப்பினர் நாடாகி உள்ளதற்கு  யாங் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது :சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது, நீடித்த வளர்ச்சியை நவீனப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்களை பற்றி பேசுவது என உங்களுடைய பணிகள், அனைவருக்கும் ஒளி நிறைந்த எதிர்காலம் உருவாக வழியேற்படுத்தும் என யாங் தெரிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India is elected to the UN Council


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->