இனி மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாய்! முதல்வர் ஸ்டாலினின் சுதந்திர தின அறிவிப்பு!
Independence Day MK Stalin announce
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முப்படை மற்றும் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். தியாகிகளின் தன்னலமற்ற போராட்டத்தால் கிடைத்த விடுதலையை அனைவரும் போற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் என்பதை நினைவுகூர்ந்தார்.
ஐந்தாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், இந்தியா அனைவருக்குமான நாடாக இருக்க வேண்டும் என்பது நமது தலைவர்களின் கனவு என்றும், சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து போராடி பெற்றதே இச்சுதந்திரம் என அவர் கூறினார். தி.மு.க. ஆட்சியில் தமிழக தியாகிகளுக்காக மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், அவர்களின் நலனுக்கான பல நிதி உயர்வுகளையும் அறிவித்தார்.
விடுதலை போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியம் 12,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். மேலும், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதியுதவி 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.
இவ்வாறு, சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ஸ்டாலின், தியாகிகளின் தன்னலமற்ற சேவையையும், மாநில அரசு மேற்கொள்ளும் நலத்திட்டங்களையும் வலியுறுத்தினார்.
English Summary
Independence Day MK Stalin announce