தனக்கு தானே ஊசிபோட்டு துடிதுடிக்க உயிரிழந்த பெண்மணி.. வெளியான பகீர் காரணம்.!!
in tenkasi girl died due to self injunction for sugar diseases
தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணி பகுதியை சார்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவியின் பெயர் வனிதா (வயது 34). இவர் பீடி சுற்றும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு நீரிழிவு நோய் இருந்த நிலையில், நீரிழிவு நோய்க்காக அவ்வப்போது ஊசிபோடும் பழக்கம் வைத்துள்ளார்.. மேலும், இவர் தனக்கான ஊசியை மருத்துவரிடம் சென்று போடாது, தானே போட்டுக்கொள்ளும் பழக்கத்தையும் வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்றுக்கு அதிகளவு நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அதிகளவு மருந்தை எடுத்து ஊசி போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வனிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வனிதா அங்குள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in tenkasi girl died due to self injunction for sugar diseases