மின்வாரிய அலட்சியத்தால் பரிதாபமாக பலியான உயிர்கள்.! சிவகங்கையில் பெரும் சோகம்.!!
in sivagangai cow died by electric attack
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகேயுள்ள கிளங்காட்டூர் கிராமத்தை சார்ந்தவர் பழனிமுருகன். இவர் விவசாயியாக பணி செய்து வரும் நிலையில்., இவரது இல்லத்தில் சொந்தமாக இரண்டு பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இவர் தினமும் தனது பசு மாடுகளை அங்குள்ள பகுதியில் இருக்கும் நிலங்களில் மேய்ச்சலுக்காக அவிழ்ந்து விடுவது வழக்கமான ஒன்றாகும். தினமும் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் மீண்டும் வந்ததும் வீட்டில் கட்டிவைத்துள்ளார்.
இந்த நிலையில்., வழக்கம் போல சம்பவத்தன்று மாடுகளை மேய்ச்சலுக்காக அனுப்பிய நிலையில்., பசு மாடுகள் சென்று கொண்டு இருந்த வழியில் மின் கம்பியானது அறுந்து கிடந்துள்ளது.
இதனை அறியாத இரண்டு மாடுகளும் மின்கம்பியின் மீது மிதித்ததை அடுத்து., மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகளும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. பசுமாடுகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்ற நபர்கள்., இது குறித்து பழனி முருகனிற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி முருகன் மாடுகளை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்து மின்வாரிய பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பணியாளர்கள்., மின்கம்பியை சரி செய்தனர். மேலும்., இப்பகுதியில் அவ்வப்போது இது போன்று மின்கம்பி அறுந்து விழுவதாகவும்., தாழ்வான மின்கம்பிகள் அதிகளவில் இருப்பதாகவும்., இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித பலனும் இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in sivagangai cow died by electric attack