பள்ளிப்பருவ தோழியை கரம்பிடித்த பெண்..! தோழிக்காக ஆணாக மாறிய பெண்.!! கண்ணீரில் கணவன் - பெண் குழந்தை..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியை சார்ந்தவர் கனி. இதே பகுதியை சார்ந்தவர் மேரி (இருவரும் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர்கள் இருவரும் பள்ளிப்பருவ தோழியாக கடந்த 2007 ஆம் வருடம் மதுரை பெண்கள் மேல்நிலைபள்ளி பகுதியில் ஒன்றாக பயின்று வந்தனர். இவர்கள் இருவரும் நல்ல தோழிகள் என்பதால்., அங்குள்ள பகுதிகளுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். இந்த நிலையில்., மேரி பெண்ணாக இருந்தாலும் பாலின மறுபாட்டின் காரணமாக ஆண் போல செயல்பாடுகளை செய்துள்ளார். 

இவர்களின் நெருக்கத்தை அறிந்த கனியின் பெற்றோர் கண்டித்த நிலையில்., கடந்த 2012 ஆம் வருடத்தில் கனிக்கு இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ராஜேஷ் என்பவருக்கு மணம்முடித்து வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏழு வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில்., இவர்களுக்கு ஆறு வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. 

love, காதல்,

Tamil online news Today News in Tamil

இந்நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக ராஜேஷிற்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படவே., நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்துள்ளார். இந்த நிலையில்., கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக தனது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்ற கனி., தனது தோழியை மீண்டும் சந்தித்துள்ளார். இந்த நேரத்தில்., இருவரும் தங்களின் அலைபேசி என்னை பகிர்ந்து., மீண்டும் தங்களின் நட்பை தொடர்ந்துள்ளனர். 

இந்த சமயத்தில்., கனி தனது வாழ்க்கையின் சோகத்தை கூறி கதறியளவே., உனக்காக நான் இருக்கிறேன்... நீ கவலைப்படாதே... என்னுடன் வா... புதிய வாழ்க்கையை நாம் வாழலாம்.. என்று கூறியுள்ளார். கனிக்கு ஆறுதலாகவும் பேசியுள்ளார். மேரியின் பேச்சில் மயங்கிய கனி., தன்னை அழைத்து செல்ல கூறி அழுது புலம்பியுள்ளார். 

lesbian,

இந்த நேரத்தில்., புது வாழ்க்கையை துவங்குவதற்க்காக மேரி என்ற பெயரை ஜெய்வா என்று மாற்றி., அறுவை சிகிச்சைக்கு பின்னர் திருநம்பியாக மாறியுள்ளார். இதற்கு பின்னர் மதுரையில் இருக்கும் தனியார் மாலில் கனி வரவேற்பாளராகவும்., மேரி என்ற ஜெய்வா காவலாளியாகவும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்குவதற்கு வீடெடுத்து இருந்து வந்துள்ளனர். 

இந்த செய்தியை அறிந்த கனியின் பெற்றோர்., கனியுடைய எதிர்காலத்திற்க்காக மீண்டும் திரும்பி வர அழைப்பு விடுத்துள்ளனர். தனது ஆறு வயது குழந்தையை தனது சகோதரரின் இல்லத்தில் விட்டுவிட்டு தனியே குடித்தனம் செய்து வரும் நிலையில்., இவர் மீண்டும் குடும்பத்திற்கு வர குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். இந்த நேரத்தில்., தனது குழந்தையை தன்னுடன் ஒப்படைக்க காவல் நிலையத்தில் கனி புகார் அளித்த நிலையில்., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் பேசியும் தீர்வு எட்டப்படாததால்., நீதிமன்றத்தில் இதற்கான தீர்வை பெறுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai girl married her friend love of same gender


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->