ஆண் குழந்தை வேண்டும் என அடம்பிடித்த கணவன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கணவன் ஆண் குழந்தை வேண்டும் என தொந்தரவு செய்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை பகுதியை சேர்ந்தவர் ஜம்பெரி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஜம்பெரி ஆண் குழந்தை மீது மிகவும் ஆவலாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஜம்பெரி அடிக்கடி மது அருந்திவிட்டு தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி பல நாள் வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் பலரும் சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், கணவன் உனது தங்கையை நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தையை பெற்றுக் கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த மனைவி ராஜேஸ்வரி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலன்களை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தர்மபுரி நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband want to boy baby wife suicide in dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->