மனைவியுடன் ஏலகிரிக்கு சுற்றுலா... கணவருக்கு நேர்ந்த பரிதாபம்.! ஆம்பூர் அருகே சோகம் - Seithipunal
Seithipunal


மனைவியுடன் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் பாபு. இவர் ஏலகிரி மலைக்கு மனைவி அபூர்வாவுடன் காரில் சுற்றுலா சென்றார். அப்பொழுது திருப்பத்தூர் ஆம்பூர் அருகே நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த நிலேஷ் பாபு பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இவரது மனைவி லேசான காயமும், ஓட்டுநர் ஹரிஷ் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த நிலேஷ் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband killed in car lorry collision in ambur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->