தலையில் கல்லை போட்டு மனைவி படுகொலை..! கணவரின் வெறிச்செயல்..! நாமக்கல்லில் பயங்கரம்...! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாரியப்பன் (61). இவரது மனைவி சரசு. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து மாரியப்பன், சின்னபொண்ணு (58) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சின்ன பொண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாரியப்பன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் சின்ன பொண்ணு கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த மாரியப்பன் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி சின்ன பொண்ணுவின் தலையில் கல்லை போட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சின்னபொண்ணு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சின்னப்பொண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மாரியப்பனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband killed his wife by putting a stone on her head in namakkal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->