கோபித்து சென்ற மனைவி.. கணவர் எடுத்த விபரீத முடிவு.! சேலம் அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் திருமனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனியப்பன் (32). இவருடைய மனைவி சரண்யா. இந்நிலையில் முனியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இவர்களிடையே தகராறு ஏற்பட்டதால், சரண்யா கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த முனியப்பன் வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband committed suicide in salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->