மனைவியுடன் தகராறு.. கணவர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்.. தர்மபுரியில் சோகம்...!
Husband committed suicide by drinking poison in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (37). இவரது மனைவி சிந்தினி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இவர்களிடையே நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜ்குமார் மனவேதனையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பூச்சி மருந்து குடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மயங்கி கிடந்த ராஜ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband committed suicide by drinking poison in dharmapuri