எமனாக மாறிய லாரி... கணவன்-மனைவி உயிரை பறித்த சோகம்..! ஈரோட்டில் பரிதாபம்...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband and wife killed by after lorry collision in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->