தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள் - நடந்தது என்ன?
heavy rain ten flight service affected in chennai
தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள் - நடந்தது என்ன?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று மாலையிலிருந்து கனமழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த படியே அரைமணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்தது.
டெல்லி, மும்பை, புனே, ராஞ்சி, கோவா, கோவை, அபுதாபி, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட 10 நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் பரணத்துக் கொண்டிருந்தது.

வானிலை சீரானதும் ஒன்றன் பின் ஒன்றாக அணைத்து விமானங்களும் தரையிறங்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒஇதேபோன்று சென்னையில் இருந்து புறப்பட்டது தயாராக இருந்த விமானங்களும் மழையால் தாமதமாக புறப்பட்டன.
சென்னையில் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான சேவைகளின் பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
English Summary
heavy rain ten flight service affected in chennai