அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை.! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?
heavy rain in next three hours at tamilnadu
அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை.! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில், ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, கறைகள் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 17 ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன் படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் லேசான மழை பெய்து வந்தது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
heavy rain in next three hours at tamilnadu