காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்துக்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி குமார் (30). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து போலீசார், இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Handicapped youth stoned to murder in kanchipuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->