அரசு விரைவு பேருந்தில் 'துப்பாக்கி' பறிமுதல்! கைரேகை நிபுணர்கள் தீவிர சோதனை.!
Gun seized govt express bus
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி, அறிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி அறிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததால் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் தடவியல் அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது/
English Summary
Gun seized govt express bus