தூத்துக்குடியில் பரபரப்பு: லாரி செட்டில் காவலாளி வெட்டிக்கொலை - போலீசார் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் லாரி செட்டில் காவலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பெயரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ்(55). இவர் லாரி செட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் செட்டில் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து இன்று அதிகாலை லாரி ஓட்டுநர்கள் எழுந்து பார்த்தபோது, லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே காவலாளி ஞானராஜ் அறிவாளால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ஞானராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன் விரோதமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Guard brutally hacked to murder in Thoothukudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->