தேனி || பணி நேரத்தில் போதையில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர் - அதிரடி காட்டிய மாணவிகள்.! - Seithipunal
Seithipunal


தேனி || பணி நேரத்தில் போதையில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர் - அதிரடி காட்டிய மாணவிகள்.!

தேனி மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணி புரிந்து வரும் அருள் பிரகாசம் என்பவர் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசி வருவதாகவும், பணி நேரத்தில் போதையில் இருந்து வருவதாகவும் பள்ளி மாணவ, மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்த புகார் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலரை அருள் பிரகாசம் தகாத வார்த்தைகளால்  திட்டியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசத்தை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட கல்வி அதிகாரி தங்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதி போலீஸார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt school teacher drunk with obscene speech to students in theni


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->