கள்ளக்குறிச்சியில் பட்டா மாற்ற லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
govt officer arrested for bribe in kallakurichi
கள்ளக்குறிச்சியில் பட்டா மாற்ற லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே எஸ் ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் மணி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டா திருத்தம் செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் மணி, தான் தொடரப்பட்ட வழக்கை தனக்கு சாதகமாக செய்யும் வகையில், பட்டாவில் திருத்தம் மேற்கொள்ள கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பாலு என்பவரை அணுகியுள்ளார்.
அங்கு பாலு பட்டா திருத்தம் செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணி, கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மணியிடம் கொடுத்து அதனை பாலுவிடம் கொடுக்குமாறுத் தெரிவித்துள்ளனர். அதன் படி மணியும் அந்தப் பணத்தை பாலுவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ் பாலுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக பாலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
govt officer arrested for bribe in kallakurichi