அரசு பள்ளியை சீர்திருத்த நிதியுதவி - ஆளுநருக்கு நன்றி தெரிவித்த கிமமக்கள்..! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளியை சீர்திருத்த நிதியுதவி - ஆளுநருக்கு நன்றி தெரிவித்த கிமமக்கள்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளி சமீபகாலமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் பள்ளியில், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி ஆளுநர் ரவியிடம் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அவரது நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை உதவியாக வழங்கியுள்ளார். இந்த நிதியைக் கொண்ட பள்ளிகளின் தரம் விரைவில் மேம்படுத்தப்படும் என்றுத் தெரிகிறது. 

இதற்கிடையே அந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சேதமடைந்த பள்ளியை சீர் திருத்துவதற்காக நிதியுதவி அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor RN Ravi compensation to govt school in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->