திடீர் விபத்து...! திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதல்...! - 15 பேர் காயம்
Government bus and van collide head on near Thiruvennainallur 15 people injured
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்று கொண்டிருந்த வேன் மீது அரசு பேருந்து மோதியதில், அதில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்து நிகழ்ந்ததும் அப்பகுதியினர் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Government bus and van collide head on near Thiruvennainallur 15 people injured