விவசாயிகளுக்கு நற்செய்தி! நாளை மறுநாள் பாசனத்திற்காக 91 -வது ஆண்டாக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரபலமான அணைகளில் ஒன்று சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை. இது கடந்த 1924 ம் ஆண்டு கட்டதொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த வழக்கத்தில் மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி, ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதில் குறிப்பாக அணையில் அதிக தண்ணீர் வந்த காரணத்தால், ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக இதுவரை 11 முறை தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.மேலும், மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவரை 90 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 91-வது ஆண்டாக குறித்தபடி நாளை மறுநாள் (12-ந் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for farmers Water is being released into Mettur Dam for irrigation 91st time tomorrow


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->