திருப்பூர்: திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் பெண் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் பின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தளவாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா(25). இவருக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரியா திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால், கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரியாவை சமாதானம் செய்து வந்த நிலையில், மனமுடைந்து காணப்பட்ட பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த பிரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl commits suicide in Tiruppur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->