திருச்சி || விவசாயக் கிணற்றில் மிதந்த பெண் சிசு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருச்சி || விவசாயக் கிணற்றில் மிதந்த பெண் சிசு - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராணி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். இந்தத் தோட்டத்தில் விவசாயக் கிணறு ஒன்று இருந்துள்ளது.

இந்தக் கிணற்றை அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்த போது, அதிக அளவில் மீன்கள் பிறந்து சில நாட்களை ஆன பெண் சிசு ஒன்றை சூழ்ந்து கடித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதே போல், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிசுவை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார் சிசுவை யார் வீசிச் சென்றது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl baby body rescue well in trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->