வெள்ளம் மீட்பு முன்னெச்சரிக்கை ..தயார் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு  முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்திலும் மழை  தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர்,  மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் அதிக  மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்  ஸ்டாலின் Iஉத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வெள்ள மீட்பு குழுவினருக்கு  அறிவுறுத்தியுள்ளார். 

வெள்ள மீட்பு பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய என் 100 அல்லது 7010363173 எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flood rescue preparedness Kanyakumari district police on alert


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->