குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு ., தற்கொலைக்கு முடிவை கைவிட்ட தந்தை.! கரூரில் நடந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளை கிணற்றில் போட்டு கொன்று விட்டு தனது தற்கொலை முடிவை கைவிட்ட தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். முருகேசன் அந்த பகுதியில் ஜே.சி.பி டிரைவராக இருந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல சம்பவதன்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது. அப்போது முருகேசன் குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

வெளியில் சென்றாவர்கள் நீண்ட நேரமாகியும் வராததால் அதிர்ச்சியைடைந்த  பிரியா அவர்களை தேடியுள்ளார். அப்போது விளைநிலங்கள் அருகில் உள்ள சாலையில் முருகேசனின் பைக் நின்றுள்ளது.

இதனால், சந்தேமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள கிணற்றில் இரு குழந்தைகளும் பிணமாக மிதந்துள்ளனர். ஒரு கரையில் முருகேசன் தவித்துள்ளார்.

இதனை கண்ட அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர தீயணைப்பு துறையினரின் உதவியுடன் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து முருகேசன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றதாகவும் பாதியில் அவர் முடிவை மாற்றி கொண்டதாவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father quites his suicide plan after killing children


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->