#சென்னை || மகள் கணவனை பிரிந்து வாழ்வதால் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்.. ! - Seithipunal
Seithipunal


மகள் கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன உளைச்சலில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, விருகம்பாக்கம், நடேசன்நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் தூத்துக்குடியை சேர்ந்த மதுசூதனரெட்டி (வயது 69) என்பவர் தனது மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
 தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.  அதில், தொழில் நஷ்டத்தாலும், மகள் திருமணமாகியும் அவர் கணவனுடன் வாழாததாலும் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளுவதாஜ தெரிவித்துள்ளார்.

அவர் தற்கொலைக்கு இதுதான் காரணாமா ? அல்லது வேறெதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father Committed Suicide in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->