மகனுக்கு பெண் பார்க்க சென்றபோது பரிதாபம்.! வேன் மோதி "தாய் - தந்தை" பலி.!
Father and mother died in van collision in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகனுக்கு பெண்பார்க்க சென்றபோது வேன் மோதி தாய்-தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டஅள்ளிபகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(49). இவரது மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்று மகள்களுக்கும் திருமணமான நிலையில், நேற்று மாலை மணிகண்டனுக்கு பெண் பார்ப்பதற்காக, பச்சையப்பன் அவரது மனைவி மற்றும் பேரன் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேலும் மணிகண்டனும், அவரது தங்கையும் மற்றொரு வாகனத்தில் சென்றனர்.
அப்பொழுது தேசிய நெடுஞ்சாலை நாட்டான் கொட்டாய் பிரிவு அருகே சென்ற போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று திடீரென பச்சையப்பன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பச்சையப்பன், அவரது மனைவி மற்றும் பேரன் ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இதைப் பார்த்த மணிகண்டன் மற்றும் அவரது தங்கை அதிர்ச்சி அடைந்து மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தாய் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பச்சைப்பன் சிகிச்சை பலனின்றி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Father and mother died in van collision in kirishnagiri