கிருஷ்ணகிரி அருகே பரிதாபம் : யானை தாக்கி விவசாயி பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர்பெட்டா பகுதியை சேர்ந்தவர் விவசாயி லகுமய்யா(53). இவர் பங்களாசரகம் வனப்பகுதி அருகே நேற்று ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை விரட்டிச் சென்ற யானை, லகுமய்யாவை தாக்கி தூக்கி வீசியுள்ளது. இதையடுத்து இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த லகுமய்யாவை வீடு சிகிச்சைக்காக தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த லகுமய்யாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer killed in elephant attack in kirishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->