திருநெல்வேலி அருகே பரிதாபம்.! மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு..!
Farmer killed by lightning in tirunelveli
திருநெல்வேலியில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்து. இதைத்தொடர்ந்து மாலை திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்பொழுது நெல்லை பேட்டை மலையாளமேடு பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் (50), மெய்சலுக்கு விட்டிருந்த மாடுகளை வீட்டிற்கு அழைத்து வர சென்றுள்ளார்.
இந்நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி முருகன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இது சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Farmer killed by lightning in tirunelveli